Wednesday 6 April 2011

உடல் எடையை குறைப்பதற்கு

ஒரு நீண்டகால முயற்சிக்கு பின்பு தான் உடல்  எடையை  குறைக்க முடியும். நினைத்த மாத்திரத்தில் உடல் பருமனைக் கட்டுப்படுத்த மாயமந்திரம் எதுவும் கிடையாது.


எவ்வளவு முயற்சி செய்தும் ஸ்லிம் ஆக முடியவில்லை!' என்று கல்லூரி சிட்டுகள் மட்டுமல்ல , இல்லத்தரசிகளும் அவ்வப்போது கவலைக் கொள்வது உண்டு.


உடல் பருமனைக் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டுமே தவிர, எடைக் குறைப்பதற்கான பிரத்யேக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனபதை கருத்தில் கொள்ள வேண்டும்.


குண்டாக இருப்பதால், உடல் எடை தேவைக்கும் அதிகமாக இருப்பதால் பல்வேறு விதமான நோய்கள் எளிதில் வந்து விடுகின்றன.


உலகிலுள்ள 600 கோடிக்கும் அதிகமான மக்களில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது உயரத்திற்கு பொருந்தாத எடையுடனும் உடல் பருமனுடனும் திகழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.


நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. தேவைக்கு மேல் சக்தி உடலில் சென்றால் அவை கொழுப்பாக உடலில் படிகிறது. ஒன்பது கலோரி ஆற்றல் ஒரு கிராம் கொழுப்புக்கு சமமாகும்.


உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, விளம்பரங்களில் காணப்படும் எடைகுறைப்பு திட்டங்கள் என பலவழிகளை குறிப்பிடுகிறார்கள். ஆனால் சமச்சீர் உணவுதான் நல்லவழி என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.


உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்....

*    உடல் எடையை குறைக்க உணவுக் கட்டுப்பாடு சமச்சீர் உணவுதான் நல்லவழி என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். 

 *   இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.


*  காலையில் எழுந்ததும் 6 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அல்லது இரவு ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் 10 கிருஷ்ணா துளசிகளைப் போட்டு ஊறவைக்கவும். காலையில் துளசிகளை அதிலிருந்து வெளியே எடுத்து துளசி குணம் நிறைந்த நீரை மென்சூடாக்கி பிறகு வெறும் வயிற்றில் குடிக்கலாம்.


*  உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவு 8 மணி நேரம் நன்றாக தூங்கவேண்டும்.


*  உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது.


*  ஒரு நபருக்கு சராசரியாக ஒரு நாளில் 1600 கேலரி ஆற்றல் தேவைப்படுகிறது.


*  மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் 55 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம். ஒரு நாளுக்கு 5 கிராம் அயோடின் கலந்த உப்பு, 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உட்கொள்ள வேண்டும்.


*  ஒருவர் உண்ணும் உணவில் 15 முதல் 30 சதவீதத்திற்குள் கொழுப்பு அடங்கவேண்டும்.அதிலும் செறிவுமிக்க கொழுப்பு 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் .


*  புரதம் மொத்த உணவில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் இருக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு மிக முக்கியம்.வியர்க்க விறுவிறுக்க சோர்ந்து போகுமளவு உடற்பயிற்சி செய்தால் மட்டுமே தொப்பை கரையும்.


*  உடல்  எடையை  குறைப்பதற்கு எண்ணெய் வேண்டுமென்றால் ஆலிவ் ஆயில்தான் உகந்தது.


*  சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.


*  காப்பிக்குப் பதில் பால் இல்லாத சுக்குக் காப்பி சிறிது பனை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் குடிக்கவும்.


*  ஒரு மணி நேரம் கழித்து ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.


*  காலை 8.30 – 9.30 மணியளவில் எந்தவிதமான மாவு ஆகாரமும் சேர்க்கக் கூடாது. பசி தாங்க முடியாதவர்கள் 1 தம்ளர் கேழ்வரகு கஞ்சி அல்லது பார்லி கஞ்சி சாப்பிடலாம்.


*  மதியம் சாப்பாடு: மதியம் சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன் காய்கறி சாலட் சாப்பிடவும்.


*  மதிய உணவிற்கு கீரையைப் பாதி வேகவைத்த நிலையிலேயே சமைத்து அதில் ஊறவைத்த பச்சைப் பாசிப் பருப்பு சேர்த்து அரிசியைக் குறைத்து நிறையக் காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடலாம்.


 *  சாப்பிடும் உணவில் வெங்காயம் , பூண்டு  அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.


*  பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல்  எடையை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.


 *  மேலும் உடலில் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வர வேண்டும்.


*  இது தவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.


*   மாலை 6 மணி : சிறிது வேகவைத்த முளைவிட்ட தானியத்தைச் சாப்பிடவும். பால் கலக்காத டீ சாப்பிடலாம்.


*  இரவு 7.30 மணி: சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பு பச்சைக் காய்கறிகள் சாப்பிடுங்கள். கவனம், எண்ணெயில் குளிப்பாட்டும் உணவுகளைத் தவிர்த்த இரவு உணவு இருக்க வேண்டும்.

  
செய்ய  கூடாதவை

 *  அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது  நல்லது.

 *  பட்டினிக் கிடத்தல் கூடாது.

 *  அதிக நொறுக்குத் தீனிகள் ( ஸ்நாக்ஸ்) கூடாது . ஐஸ்கிரீம், கிரீம் கேக், பிஸ்கட்ஸ் மற்றும் பேக்கரி உணவுகள் .

*   பூஸ்ட் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் தவிர்ப்பது  நல்லது.

*  தேங்காய் , வெண்ணெய், சீஸ், டால்டா வறுத்த மற்றும் பொதித்த உணவு வகைகள் தவிர்ப்பது  நல்லது. 

* வால்நட் பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை  தவிர்ப்பது  நல்லது.   


 *  உருளைக்கிழங்கு ,சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்.

* இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும் எடைக் குறைப்பதற்கான பிரத்யேக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது .

கொழுப்பு செல்கள்

  Fat cells என்கிற கொழுப்பு செல்கள் பெரிதானால் உடல் எடை அதிகரித்து பருமன் வந்து விடும். இந்த செல்களின் அதிகரிப்பு இரண்டு விதங்களில் நடக்கலாம்.

1     இருக்கிற செல்கள் அளவில் பெரிதாவது
2     இருக்கிற செல்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது

 உடல் பருமனில் சேமிக்கிற சக்தி அதிகமாகி, செலவழிக்கிற சக்தி குறைந்து விடும். இதனால் கொழுப்பு செல்கள் பெரிதாக ஆரம்பித்து விடுகின்றன.

அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.





No comments:

Post a Comment